நெல்லை திமுக பிரமுகர் படுகொலை: மண்ணெண்ணை பேரல்களை சாலையில் போட்டு திட்டமிட்டு கொன்றது அம்பலம் !

 

நெல்லை திமுக பிரமுகர் படுகொலை:  மண்ணெண்ணை பேரல்களை சாலையில் போட்டு திட்டமிட்டு கொன்றது அம்பலம் !

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராமன் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றி வந்தவர் முத்துராமன். இவர் நேற்றிரவு 9.30 மணியளவில் தெற்கு வள்ளியூரில் தனது உறவினர் ஒருவரை காரில் இறக்கி விட்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

நெல்லை திமுக பிரமுகர் படுகொலை:  மண்ணெண்ணை பேரல்களை சாலையில் போட்டு திட்டமிட்டு கொன்றது அம்பலம் !

அப்போது தெற்கு வள்ளியூர் ரேஷன் கடை அருகே அவர் வந்து கொண்டிருந்த போது சாலையில் மண்ணெண்ணை பேரல்கள் கிடந்துள்ளன. இதை கண்ட முத்துராமன் , காரில் இருந்து இறங்கி மண்ணெண்ணை பேரல்களை அகற்ற முற்பட்டுள்ளார்.

நெல்லை திமுக பிரமுகர் படுகொலை:  மண்ணெண்ணை பேரல்களை சாலையில் போட்டு திட்டமிட்டு கொன்றது அம்பலம் !

அப்போது அங்கிருந்த கலையரங்கத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த மர்மகும்பல் திடீரென வந்து முத்துராமனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. இதில் முத்துராமன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் முத்துராமனை மீட்டுஅருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

நெல்லை திமுக பிரமுகர் படுகொலை:  மண்ணெண்ணை பேரல்களை சாலையில் போட்டு திட்டமிட்டு கொன்றது அம்பலம் !

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பணகுடி போலீசார் முத்துராமன் படுகொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.