நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் போடவிருக்கும் முக்கிய உத்தரவு!

 

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் போடவிருக்கும் முக்கிய உத்தரவு!

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்திருக்கிறது. மறுபுறம் வேட்பாளர்களை டிக் செய்வதற்கான நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. இரு நாட்களாக இந்த நேர்காணல் நடைபெற்றுவருகிறது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் போடவிருக்கும் முக்கிய உத்தரவு!

இந்நிலையில், நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 5), வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் போடவிருக்கும் முக்கிய உத்தரவு!

அப்போது, மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 7ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் போடவிருக்கும் முக்கிய உத்தரவு!

அதேசமயம் தலைமை தேர்வுசெய்யும் வேட்பாளர்களுக்கு அனைவரும் ஆதரவளித்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடவிருப்பதாகவும் கூறப்படுகிறது. யாரும் தங்களை வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்ற மனப்பான்மையுடன் வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்று கூறவிருக்கிறாராம்.