எல்லா மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

 

எல்லா மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி இன்று காலை 10 மணிக்கு காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எல்லா மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

அந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் கொரோனா பரவதன் காரணம் கோயம்பேடு சந்தையை மாற்ற தாமதம் ஆனதே காரணம் என்றும் கொரோனாவை கட்டுப்படுத்தமால் கைது நடவடிக்கை மேற்கொள்வதா என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் நிலையில் தமிழக அரசு முறையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. திமுக எம்.பியும் அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கைது நடவடிக்கைகளை எதிர்கொள்ள எல்லா மாவட்டத்திலும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.