தனியாருக்கு நில ஒதுக்கீடு விவகாரம்..ஆளுநரிடம் திமுக புகார்

 

தனியாருக்கு நில ஒதுக்கீடு விவகாரம்..ஆளுநரிடம் திமுக புகார்

நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதியளிக்க ஆளுநரிடம் திமுக புகாரளித்துள்ளது.

நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதியளிக்க ஆளுநருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அரசு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு என்றும், ஒரு சதுர அடியின் சந்தை விலை ரூ.25,000 ஆக உள்ள நிலையில் தனியார் நிறுவனத்துக்கு ரூ.12,500க்கு நிலம் ஒதுக்கீடு எனவும் திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. அரசு ஒதுக்கிய நிலத்தில் தனியார் நிறுவனம் 2078 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதை சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு நில ஒதுக்கீடு விவகாரம்..ஆளுநரிடம் திமுக புகார்

குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு அரசு நிலத்தை குறைந்த விலைக்கு கொடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. நில ஒதுக்கீட்டுக்காக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம், அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு பல கோடி லஞ்சம் கைமாறி இருப்பதாக குற்றஞ்சாட்டி, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடிதம் அனுப்பியுள்ளார். நிலம் ஒதுக்குவதற்கு வெளிப்படையாக ஏலம் கோராமல் ரகசியமாக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடப்பாடி உள்ளிட்ட 3 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்க திமுக வலியுறுத்தியுள்ளது.