விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் திமுக: வரும் 5ம் தேதி போராட்டம்!

 

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் திமுக: வரும் 5ம் தேதி போராட்டம்!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் திமுக: வரும் 5ம் தேதி போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் புராரி மைதானத்தில் நூற்றுக் கணக்கான விவசாயிகள், கடந்த வியாழக்கிழமையில் இருந்து போராட்டம் நடத்தி வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது இரவு, பகலாக அங்கு போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் டெல்லி போராட்டம் குறித்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், விவாயிகள் மீதான தாக்குதல் மற்றும் மத்திய அரசின் அலட்சியப்போக்கு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் திமுக: வரும் 5ம் தேதி போராட்டம்!

இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 5ம் தேதியன்று காலை 10 மணிக்கு, மாவட்ட தலைநகரங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இன்று விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது என்பது நினைவு கூரத்தக்கது.