‘திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் பிரிப்பு’ பொறுப்பாளர்கள் நியமனம் – திமுக அறிவிப்பு!

 

‘திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் பிரிப்பு’ பொறுப்பாளர்கள் நியமனம் – திமுக அறிவிப்பு!

நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை பிரித்து, அதற்கென தனித் தனி பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் பிரிப்பு’ பொறுப்பாளர்கள் நியமனம் – திமுக அறிவிப்பு!

அதில், ‘திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்திய’ ஆகிய மாவட்டங்கள் கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செவ்வனே நடைபெறவும் திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு மற்றும் தென்காசி தெற்கு என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்: அம்பாசமுத்திரம், நாங்குநேரி ராதாபுரம். திருநெல்வேலி மத்திய மாவட்டம்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை. தென்காசி வடக்கு மாவட்டம்: வாசுதேவநல்லூர், கடையநல்லூர். தென்காசி தெற்கு மாவட்டம்: சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம்.

புதியதாக அமையப் பெற்ற திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்- ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்டம் – அப்துல் வகாப், தென்காசி தெற்கு மாவட்டம்- சிவ பத்மநாபன், தென்காசி வடக்கு மாவட்டம்- ஆ.துரை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.