‘நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்’.. திமுக கூட்டணி கட்சியினர் அமைதி பேரணி!

 

‘நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்’.. திமுக கூட்டணி கட்சியினர் அமைதி பேரணி!

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் அமைதிப்பேரணி நடத்தினர்.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கிடையே வரும் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தேர்வு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படாது என தேர்வு முகமை தெரிவித்துவிட்டது. அதனால் அனைத்து எதிர்ப்புகளுக்கிடையே நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பலர் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

‘நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்’.. திமுக கூட்டணி கட்சியினர் அமைதி பேரணி!

இதனைத்தொடர்ந்து, நேற்று செந்துறை அருகே எலத்தங்குழியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய விபரீத முடிவை மாணவர்கள் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்திய முதல்வர், உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் அமைதிப்பேரணி நடத்தினர். இரண்டு நாட்களுக்கு முன்னர், உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.