நாளை மறுநாள் விஜயகாந்த் ஆலோசனை!

 

நாளை மறுநாள் விஜயகாந்த் ஆலோசனை!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டிச.13ல் விஜயகாந்த் தலைமையில் நடைபெறுகிறது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என பல வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அதிமுக – பாஜக கட்சிகள் கூட்டணி குறித்து வெளிப்படையாகவே அறிவித்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருந்தது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

நாளை மறுநாள் விஜயகாந்த் ஆலோசனை!

இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நாளை மறுநாள் ஆலோனை நடத்தவுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

நாளை மறுநாள் விஜயகாந்த் ஆலோசனை!

முன்னதாக தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் நினைப்பதாக விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா தெரிவித்தார். அதேபோல் 234 தொகுதிகளிலும் வெற்றி
பெறும் என்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கிளைமாக்ஸில் விஜயகாந்த் வருவார் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.