என்னுடைய தம்பி பெயர் சௌகத் அலி… விஜயபிரபாகரன் சொன்ன ரகசியம்!

 

என்னுடைய தம்பி பெயர் சௌகத் அலி… விஜயபிரபாகரன் சொன்ன ரகசியம்!

அமமுகவில் தான் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் உள்ளனர் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

என்னுடைய தம்பி பெயர் சௌகத் அலி… விஜயபிரபாகரன் சொன்ன ரகசியம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபாலுக்கு ஆதரவாக துவரங்குறிச்சி மற்றும் வையம்பட்டி பகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய செங்கல்லை எடுத்து வந்த உதயநிதி பரப்புரையில் கேள்வி கேட்டது நல்ல விஷயம் தான். ஆனால் உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வரமுடியுமா? அவர்கள் மீது தவறை வைத்துக்கொண்டு மற்றவர்களை தப்ப சொல்லக்கூடாது என்றார்.

என்னுடைய தம்பி பெயர் சௌகத் அலி… விஜயபிரபாகரன் சொன்ன ரகசியம்!

தொடர்ந்து பேசிய அவர், “அமமுக – தேமுதிக கூட்டணி துரோகத்தால் உருவான கூட்டணி. கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வாய்த்த நாங்கள், தற்போது அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். காரணம் அமமுகவில் தான் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் உள்ளனர். சிறுபான்மை மக்களுக்கு விஜயகாந்த் எப்போதும் நல்லதே செய்துள்ளார்; செய்வார். அதனால் தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சௌகத் அலி என வைக்கப்பட்டது. ஆனாலும் பாஸ்போர்ட் போன்ற காரணங்களுக்காக தான் சண்முக பாண்டியன் என்று பெயர் வைக்கப்பட்டது. நான் அவனை வீட்டில் சௌகத் என்று தான் அழைப்பேன் ” என்றார்.