அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை

 

அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை

அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் தேமுதிக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதனால் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில்முடிவு எட்டப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக, தனித்து போட்டியிட முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ், நமது முதல்வர் கேப்டன், நமது சின்னம் முரசு என இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை

இதையடுத்து மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறது. 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதன்படி இன்று தேமுதிக கட்சியின் தொகுதி பங்கீடு இறுதியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.தேமுதிகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அப்படி இல்லையென்றால், 15 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் லோக் சபா எம்.பி பதவியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.