விஜயகாந்த் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; வதந்திகளை நம்பாதீர்கள்- தேமுதிக தலைமைக் கழகம்

 

விஜயகாந்த் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; வதந்திகளை நம்பாதீர்கள்- தேமுதிக தலைமைக் கழகம்

கடந்த மாத இறுதியில் வழக்கமான சிகிச்சைக்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் சென்னை மணப்பாக்கத்தில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை சீரானதையடுத்து கடந்த 2 ஆம் தேதி டிஸ்சார்க் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது விஜயகாந்த்தின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; வதந்திகளை நம்பாதீர்கள்- தேமுதிக தலைமைக் கழகம்

இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். கேப்டன் நலமுடன் உள்ளார்” என தெரிவித்துள்ளது.