விஜயகாந்தை கேலி செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதால் நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக மனு!

 

விஜயகாந்தை கேலி செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதால் நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக மனு!

தேமுதிக தலைவர் கேப்டன் மற்றும் பிரேமலதா அவர்களை கேலி செய்யும் விதமாகவும் கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் கார்டூன் வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு….

நேற்றைய தினம் தினமலர் நாளிதழில் கேப்டன் மற்றும் பிரேமலதா அவர்களையும் கட்சியையும் களங்கபடுத்தும் நோக்கத்துடன் கார்டூன் படம் வரைந்து அவதூறாக செய்தி வெளியீட்டனர். அதனை கண்டித்து தமிழகம் முழூவதும் தேமுதிக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர் எஸ்.ஆனந்த் தலைமையில் கழக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்கிணிப்பாளர் தங்கதுரையிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்
தினமலர் நாளிதழில் தேமுதி தலைவர் கேப்டன் அவர்களையும் அண்ணியார் அவர்களையும் கேலி செய்யும் வகையிலும் மக்கள் மத்தியில் தேமுதிக கழகத்திற்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையிலும் கார்டூன் வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேணடும் என கோரிக்கைவிடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
செய்தி;அமுதினி