அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை! நேரடியாக ஈபிஎஸ்- ஐ சந்தித்த தேமுதிக நிர்வாகிகள்

 

அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை! நேரடியாக ஈபிஎஸ்- ஐ சந்தித்த தேமுதிக நிர்வாகிகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திமுகவும், அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாமக, பாஜகவுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்தது.

அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை! நேரடியாக ஈபிஎஸ்- ஐ சந்தித்த தேமுதிக நிர்வாகிகள்

அதிமுக- தேமுதிக இடையேயான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் சென்னையில் உள்ள லீலா பேலசில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்துவருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றுவருகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை தொகுதி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.