தேமுதிக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை: சிவகாசி அருகே பரபரப்பு!

 

தேமுதிக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை: சிவகாசி அருகே பரபரப்பு!

சிவகாசி அருகே தேமுதிக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது, இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வழக்கம் போலவே தற்போது கட்சிகளுக்கிடையே கூட்டணி உள்ளிட்ட பல பிரச்னைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் சிவகாசி அருகே தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை: சிவகாசி அருகே பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் வசித்து வந்தவர் தேமுதிக பிரமுகர் சங்கிலி ராஜன். நேற்று இரவு, சங்கிலி ராஜனை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். அதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சங்கிலி ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கட்சிப் பகையால் சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சங்கிலி ராஜனை கொலை செய்த மர்ம கும்பலை தேடுதல் வேட்டையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீட்டின் அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.