தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை டிஸ்சார்ஜ்!

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்று பாதித்ததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த திங்கட்கிழமை சென்னையில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலம் பெற வேண்டி பல்வேறு கோவில்களில் தேமுதிகவினரால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் விஜயகாந்த் விரைவாக நலம்பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரமும், தே.மு.தி.க தலைமையும் அறிவித்திருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், கேப்டன் விஜயகாந்த் தற்போது குணமடைந்துவிட்டதாகவும், நாளை மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். மேலும் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 29 உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றும் அதைவிட அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் 2021 தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.