தினமலர் நாளிதழை எரித்து ஆர்ப்பாட்டம்- வாணியம்பாடியில் பரபரப்பு

 

தினமலர் நாளிதழை எரித்து ஆர்ப்பாட்டம்- வாணியம்பாடியில் பரபரப்பு

வாணியம்பாடி

தினமலர் நாளிதழுக்கு எதிராக, வாணியம்பாடியில் தேமுதிகவினர், அந்த நாளிதழை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரை கேலி செய்யும் விதமாக கார்டூன் வெளியிட்டதாக தினமலர் நாளிதழுக்கு எதிராக, அந்த கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் நாளிதழை எரித்து ஆர்ப்பாட்டம்- வாணியம்பாடியில் பரபரப்பு


தினமலர் நாளிதழ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல்நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர காவல் நிலையம் முன்பாக

தினமலர் நாளிதழை எரித்து ஆர்ப்பாட்டம்- வாணியம்பாடியில் பரபரப்பு

தினமலர் நாளிதழிலை எரித்து தேமுதிக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.