திமுகவிற்கு தாவிய அதிமுக, தேமுதிக நிர்வாகிகள்

 

திமுகவிற்கு தாவிய அதிமுக, தேமுதிக நிர்வாகிகள்

தேமுதிக, அதிமுகவில் முக்கிய பொறுப்பிலிருக்கும் நிர்வாகிகள் சிலர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ஈரோடு வடக்கு மாவட்டம், தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஏ.எஸ்.ரத்தினசாமி, பி.காம்., பி.எட்., பி.எல்., மற்றும் ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருமதி பி.பாக்யலட்சுமி ரத்தினசாமி ஆகியோர் இன்று, தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

Image

இதேபோல் திருப்பூர் தெற்கு மாவட்டம், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த குடிமங்கலம் ஒன்றிய முன்னாள் செயலாளரும் – பிஏபி பாசன தலைவரும் – கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான சுந்தரசாமி அவர்கள் தலைமையில், அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த உடுமலை வடக்கு ஒன்றியச் செயலாளர் டி.சிவலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பள்ளபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் சி.கிருஷ்ணசாமி ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.