ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை- திவ்யா சத்யராஜ் அதிரடி

 

ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை- திவ்யா சத்யராஜ் அதிரடி

ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டது. இதற்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். ஊட்டச்சத்து நிபுணராகவும், ‘மகிழ்மதி’இயக்கத்தின் தலைவராகவும் இருக்கும் திவ்யா சத்யராஜ், “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது’’என தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி கட்சியிலிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை- திவ்யா சத்யராஜ் அதிரடி

இந்நிலையில் திவ்யா சத்யராஜ் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது மீண்டும் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ரத யாத்திரையை எதிர்த்ததற்காக, மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை” என தெரிவித்துள்ளார்.