“எடப்பாடி விட்டா சசிகலா காலுக்குள்ள புகுந்துருப்பாரு” அவதூறு பேசிய உதயநிதிக்கு திவாகரன் மகன் வக்கீல் நோட்டீஸ்

 

“எடப்பாடி விட்டா சசிகலா காலுக்குள்ள புகுந்துருப்பாரு” அவதூறு பேசிய உதயநிதிக்கு திவாகரன் மகன் வக்கீல் நோட்டீஸ்

அரசியலில் இளஞ்சிங்கமாக உருவெடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈட்பட்டுவருகிறார். அண்மையில் பிரச்சாரத்தில் பேசிய அவர், முதல்வர் பழனிசாமியை விமர்சனம் என்கிற பெயரில் சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றதாக அவதூறாக பேசினார். இதற்கு டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா குறித்து அவதூறு பேசியதற்காக உதயநிதிக்கு திவாகரன் மகன் ஜெயானந்த் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், உதயநிதி, “எடப்பாடி டெட்பாடி, எடப்பாடி சசிகலா காலில் விழுந்து கும்பிட்டாரு.. விட்டா அந்தம்மா காலுக்குள்ள புகுந்துருப்பாரு” என உதயநிதி ஸ்டாலின் பரப்புரைக்கூட்டத்தில் பேசியதை சுட்டிக்காட்டியுள்ளார். சசிகலா குறித்து அவதூறு பேசிததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பேசியதை வாபஸ் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“எடப்பாடி விட்டா சசிகலா காலுக்குள்ள புகுந்துருப்பாரு” அவதூறு பேசிய உதயநிதிக்கு திவாகரன் மகன் வக்கீல் நோட்டீஸ்

டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில், “பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி! பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.