திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை!

 

திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்த மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன மண்டவாடியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகன் ரஞ்சித்(24). இவர் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி, பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை விடுதி அறையில் உள்ள நண்பர் பணிக்கு சென்ற நிலையில், தனியாக இருந்த ரஞ்சித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை!

சிறிது நேரத்திற்கு பின் அறைக்கு வந்த நண்பர் கதவை தட்டியபோது உட்புறமாக பூட்டி இருந்தது.இதனால் ஜன்னல் வழியே பார்த்தபோது ரஞ்சித் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து உடனடியாக அவர், அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் அறைக்கதவை உடைத்துச் சென்று ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பணிச்சுமை காரணமாக ரஞ்சித் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.