தென்காசி அருகே குடும்ப தகராறில் கூலி தொழிலாளி தற்கொலை!

 

தென்காசி அருகே குடும்ப தகராறில் கூலி தொழிலாளி தற்கொலை!

தென்காசி

தென்காசி அருகே குடும்ப தகராறில் பூச்சி மருந்து குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள திரவியநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (47). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே செல்வராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தென்காசி அருகே குடும்ப தகராறில் கூலி தொழிலாளி தற்கொலை!

இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வராஜ், நேற்று முன்தினம் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, நேற்று மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவமனை செல்லும் வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, செல்வராஜ் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்