திருவள்ளூர் அருகே தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற மகன் கைது

 
murder

திருவள்ளூர் அருகே தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற மனநிலை பாதிக்கப்பட்ட மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பாண்டியன். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், அவருக்கு குணமடையவில்லை என்றும்  கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் பாலகிருஷ்ணனும், அவரது மகன் பாண்டியன் மட்டும் இருந்துள்ளனர்.

arrest

நள்ளிரவில் திடீரென மின்சாரம் தடை பட்டதால்,  பாலகிருஷ்ணன், மகனிடம் மெழுகுவர்த்தியை எடுத்து வரும்படி கூறி உள்ளார். அப்போது, தந்தை - மகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து, பாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளி பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை மனநிலை பாதித்த மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.