பைக் மீது கல்லூரி பேருந்து மோதியதில் தனியார் பள்ளி ஆசிரியை பலி!

 
trichy

திருச்சி நீதிமன்றம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில், தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்துள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் அங்கையர்கரசி. இவர் திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில், அவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ஆசிரியை அங்கையர்கரசி இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். 

accident

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலையை அடுத்த பாரதிதாசன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கையர்கரசியின் வாகனம் மீது எதிர்பாராத விதமாக தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், ஆசிரியை அங்கையர்கரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.