திருமங்கலத்தில் 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

 

திருமங்கலத்தில் 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

மதுரை

திருமங்கலத்தில் 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் முத்துரங்கன் தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் – லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சத்யபாமா(13) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். சத்தியபாமா, தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கார்த்திகேயன், திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே பேன்சி கடை நடத்தி வருகிறார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்த சத்யபாமா, தந்தைக்கு உதவியாக கடைக்கு சென்று வியாபாரத்தை கவனித்து வந்தார்.

திருமங்கலத்தில் 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

நேற்று காலை தந்தையுடன் கடையில் இருந்த அவர், இரவு 7 மணியவில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். சிறிதுநேரம் கழித்து கார்த்திகேயன் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்றபோது மகள் சத்தியபாமா தூக்கிட்ட நிலையில் சடலமாக தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் கதறி அழுதார்.

தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், திருமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது