கிருஷ்ணகிரி அருகே திருமணமான 4 மாதத்தில் சிறுமி தற்கொலை!

 

கிருஷ்ணகிரி அருகே திருமணமான 4 மாதத்தில் சிறுமி தற்கொலை!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திருமணமான 4 மாதத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (21). இவர் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், சூளகிரி அருகே உள்ள அஞ்சலகிரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.

கிருஷ்ணகிரி அருகே திருமணமான 4 மாதத்தில் சிறுமி தற்கொலை!

இதனிடையே, சிறுமிக்கு விருப்பமின்றி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் நாகரசம்பட்டி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.