"கனமழையால் பாதிக்கப்பட்ட வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் சீரமைக்கப்படும்" - அமைச்சர் முத்துச்சாமி!

 
muthu

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கபட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்களை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும், குடியிருப்போர் சங்கத்தினர் அரசுடன் ஒன்றுபட்டால் விரைவில் பணிகள் நிறைவு செய்ய முடியும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு அடுத்த திண்டல் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு, பல்வேறு இடங்களிலும் தேங்கியிருக்கும் நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை சுற்றியிருக்கும் மழைநீரை வெளியேற்ற, மாநகராட்சி பணியாளர்கள் போர்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினார். 

erode

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், விரைவில் கட்டிடங்கள் சீரமைக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துச்சாமி கூறினார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தண்ணீர் தேங்குவதை சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அமைச்சர் முத்துசாமி, அடுத்த 2 ஆண்டுகளில் இதற்கான தீர்வு ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக கூறினார். மேலும்,, அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர், அரசுடன் இணைந்து செயல்பட்டால் அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.