திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு அரசுக்கல்லூரி மாணவி பலி

 
dengue

திருச்சியில்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசுக் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி கொட்டப்பட்டு இங்கை தமிழர் சிறப்பு முகாமை சேர்ந்தவர் முகுந்தன். இவர் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஜீவிதா என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவிதா, திருச்சியில் உள்ள அரசுக்கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீவிதாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை.

dead body

இதனை அடுத்து,  கடந்த 17ஆம் தேதி ஜீவிதாவை பெற்றோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.