கொரோனா தடுப்பூசி போடும் 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டா… பவானி நகராட்சி அசத்தல் அறிவிப்பு!

 

கொரோனா தடுப்பூசி போடும் 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டா… பவானி நகராட்சி அசத்தல் அறிவிப்பு!


ஈரோடு

பவானி நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் 10 பேருக்கு குலுக்கல் முறையில் வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், ஏராளமானோர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டினர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 538 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானி ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 மையங்கள், அம்மாபேட்டை வட்டாரத்தில் 63 மையங்கள் என 102 தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடப் வருபவர்களுக்கு ஏராளமான பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டா… பவானி நகராட்சி அசத்தல் அறிவிப்பு!

அதன்படி, முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2ஆம் பரிசாக ரூ. 2,000 மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கும், 3ஆம் பரிசாக ரூ.500 மதிப்புள்ள புடவைகள், ரூ.500 மதிப்புள்ள வேஷ்டிகள் தலா 10 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன், ஆறுதல் பரிசாக 4 பேருக்கு ரூ.400 மதிப்புள்ள ரீ-சார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், சிறப்பு பரிசாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 10 ஏழை, எளிய மக்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தலா 2 சென்ட் வீடு மனை பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:- பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த வாரம் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோன்று, இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமிலும் பொதுமக்களுக்கு ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், அம்மாபேட்டை ஒன்றியம் மற்றும் பவானி ஒன்றியத்தில் ஆண்டி குளம், ஒரிச்சேரி, சின்னப்புலியூர், ஓடத்துறை ஊராட்சி பொதுமக்கள் இந்த குலுக்கல் பரிசு திட்டத்தில் பங்கேற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.