மகன் இறந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை

 

மகன் இறந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை

கோவை

கோவை மாவட்டம் ஆனைமலையில் மகன் இறந்த வேதனையில் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் கலையரசன். கூலி தொழிலாளி. இவருக்கு சகாயமேரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆன நிலையில், சகாயமேரி தனது மகனுடன் தனியே வசித்து வந்துள்ளார்.

மகன் இறந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை

இந்த நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன்பு மகன் விபத்தில் உயிரிழந்து விட்டார். இதனால், தனியே வசித்து வந்த சகாயமேரி, மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த ஆனைமலை போலீசார், உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.