வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் - நாமக்கல் ஆட்சியர் அழைப்பு!

 
collector namakkal

நாமக்கல் வட்டார இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் 2 வட்டார இயக்க மேலாளர்கள், 7 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் 2 வட்டார இயக்க மேலாளர்கள் ( கொல்லிமலை, வெண்ணந்துர் வட்டாரங்கள்) மற்றும் 7 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (கபிலர் மலை, எருமப்பட்டி, மல்லசமுத்திரம், மோகனுர், நாமகிரிபேட்டை, வெண்ணந்துர் வட்டாரங்கள்) கீழ் கண்ட தகுதியின் அடிப்படையில் பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வட்டார இயக்க மேலாளர் (BMM) தகுதிகள்

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MS Office-ல் குறைந்தபட்சம் 6 மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 28 வயதுக்குட்பட்டவராகவும், நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கம்பியூட்டர் அப்ளிகேஷன் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

namakkal

வட்டார ஒருங்கிணைப்பாளர் (BC) தகுதிகள்

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MS Office-ல் குறைந்தபட்சம் 6 மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 28 வயதுக்குட்பட்டவராகவும், அந்தந்த வட்டாரத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். 

மேற்கண்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பத்தை 30.09.2022 தேதிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகினில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.