"வெளிநாட்டு வேலை: பணிபுரியபோகும் நிறுவனத்தின் உண்மை தன்மையை உறுதிசெய்து செல்லவும்" - சேலம் ஆட்சியர்!

 
collector

இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்துகொண்டு செல்ல வேண்டும் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் (Digital Sales and Marketing Executive) வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online Scamming) போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் பெறப்படுகிறது.

jobs

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசையோ அல்லது சம்மந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களையோ தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து கொண்டும், ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அல்லது வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் 96000 23645, 87602 48652, 044 28515288 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.