ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் பெண் வாக்காளர்கள்!

 
voting

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய பங்காக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு சட்டமன்ற தொகுதி, கடந்த 2010ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என 2 தொகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்று, அத்தொகுதியின் முதல் எம்.எல்.ஏ ஆகினார். கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே. எஸ். தென்னரசும், அதனை தொடர்ந்து கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி  திருமகன் ஈவெரா-வும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-க்கள் ஆகினர். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக திருமகன் ஈவெரா மரணமடைந்ததை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

generic erode

இத்தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 440 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர். 60 வார்டுகள் கொண்ட ஈரோடு மாநகராட்சியில் 37 வார்டுகள், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடங்கியுள்ளன. எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய பங்காக பெண் வாக்காளர்கள் திகழ்கின்றனர்.