கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு ஆக.3-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 
collector namakkal

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவிட்டு உள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகி நாட்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா  கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் 2.08.2022 மற்றும் 3.08.2022 ஆகிய நாட்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவின் போது அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சிகள், மூலிகை செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லுரிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் குடும்பத்துடன் கொல்லிமலை பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால், எதிர்வரும் 3.08.2022( ஆடி மாதம் 18ஆம் நாள்) புதன் கிழமை அன்று வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளதால், 3.08.2022 ஆம் நாளன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.  மேலும், இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022  சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

Image

மேலும், பார்வை 1இல் காணும் அரசாணையின் படி இந்த உள்ளுர் விமுறை நாட்கள் செலவாணி முறிச் சட்டம், 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளுர் விடுமுறை நாளான 3.08.2022 அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவ்விடுமுறை வங்கிகளுக்க பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக, ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.