கந்தர்வகோட்டை அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்து: கல்லூரி மாணவி பலி!

 
accident

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்துள்ள முதுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். இவருக்கு கனகராஜ்(24) என்ற மகனும், மீனாசுந்தரி (22) என்ற மகளும் உள்ளனர். மீனா சுந்தரி, தஞ்சையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை மீனா சுந்தரி கல்லூரி செல்வதற்காக தனது அண்ணன் கனகராஜுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முதுகுளம் அருகே சென்றபோது கனகராஜ் இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக சோளம் ஏற்றி வந்த டிராக்டர் மோதி விபத்திற்குள்ளானது. 

gandharvakottai

இதில் மீனாசுந்தரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கனராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வகோட்டை போலிசார், பலியான மீனா சுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.