சேலத்தில் ரயிலில் கடத்திச்சென்ற 5 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
cannabis

சேலம் வழியாக சென்ற ஆலப்புழா விரைவு ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி செல்லும், ஆலப்புழா விரைவு ரயில் நேற்று சேலம் ரயில் நிலையம் வந்தது. அப்போது, ரயில்வே போலீசார், அந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முன்பதிவில்லா பெட்டியில் பை ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அந்த பையை பிரித்து சோதனையிட்டனர்.

salem

அப்போது, அதில் இருந்த பண்டல்களில் கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, சுமார் 5 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அது சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை கடத்திச்சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.