விரைவில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு!

 

விரைவில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு!

தேமுதிக மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

விரைவில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு!

இந்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்தவுடன் வெகுவிரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேர்தல் முடிந்தவுடன் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தின் நடத்துவதாக இருந்தது. ஆனால் ஊரடங்கு உடனடியாக அமலுக்கு வந்ததால் காரணமாகவும் ஒரே இடத்தில் அனைவரும் கூட்டம் சேர கூடாது என்பதற்காகவும் ஆலோசனை கூட்டம் நடத்த முடியவில்லை. வெகுவிரைவில் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் அனைத்து மாவட்ட செயலாளர்களை தலைமைக் கழகத்திற்கு நேரில் அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். இதில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி வைப்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கிறோம். அதேபோல் தேர்தல் முடிந்த இந்த நேரத்தில் மாவட்ட செயலாளரை நேரில் அழைத்து இனி வரும் காலங்களில் தேமுதிக எப்படி வழி நடத்தி செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். வரும் காலத்தில் தேமுதிக மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.

இதுபோன்ற நேரத்தில் கழக நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமை கழகம் மீது களங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் அனைவரும் ஒன்றிணைந்து கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் . ஊரடங்கு முடிந்த உடனே அல்லது தமிழக அரசின் சிறப்பு அனுமதித் பெற்றோ மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே இந்த நேரத்தில் கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதியாக இருந்து கட்சியின் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.