திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தம்!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தம்!

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தம்!

திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட  170ற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தம்!

திருப்பதியில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் இன்று (ஜூலை 21) முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக சித்தூா் மாவட்ட ஆட்சியா் நாராயண பரத் குப்தா அறிவித்துள்ளார். இதன் காரணமாக முழு ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் 11 மணிவரை மட்டுமே கடைகள், உணவகங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவை திறக்க வேண்டும் என்றும் திருப்பதி நகர மக்கள் பகல் 11 மணிக்குப் பிறகு வெளியில் நடமாட அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகிக்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் வினியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.