தூய்மை பணியாளர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

 

தூய்மை பணியாளர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

ஈரோடு

பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை, துப்புரவு பணியாளர்களுக்கு, அதிமுக சார்பில் எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். அதன்படி, முதற்கட்டமாக பெருந்துறை தொகுதியில் உள்ள 8 பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள் உள்ளிட்ட 420 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

தூய்மை பணியாளர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

இதன் தொடர்ச்சியாக, மேலும், 72 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி, நேற்று சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈங்கூர், வரப்பாளையம், வாய்ப்பாடி, பனியம்பள்ளி, சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை சார்ந்த 150 முன் கள பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதனை பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.