விழித்திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செல்போன்கள் விநியோகம்…

 

விழித்திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செல்போன்கள் விநியோகம்…

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு நாள் கூட்டம், ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களிடம், ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

விழித்திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செல்போன்கள் விநியோகம்…

அதனை தொடர்ந்து, விழித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்த செல்போன்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 210 பேருக்கு செல்போன்கள் ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், முதற்கட்டமாக இன்று 62 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஆட்சியர் வழங்கினார்.

இந்த செல்போனில் உள்ள பிரத்யேக செயலியின் மூலம் மாற்றுத் திறனாளிகள் எளிமையாக கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்போன்களை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் ஆட்சியருக்கு மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.