“ஸ்டாலின் அமைத்த குழுவை கலையுங்கள்” – நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றம் ஓடிய ‘தமிழக’ பாஜக!

 

“ஸ்டாலின் அமைத்த குழுவை கலையுங்கள்” – நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றம் ஓடிய ‘தமிழக’ பாஜக!

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அரசு அக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

“ஸ்டாலின் அமைத்த குழுவை கலையுங்கள்” – நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றம் ஓடிய ‘தமிழக’ பாஜக!

இதுதொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.

“ஸ்டாலின் அமைத்த குழுவை கலையுங்கள்” – நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றம் ஓடிய ‘தமிழக’ பாஜக!

மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது அனுமதிக்கத்தக்கதல்ல. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.