பெட்ரோல் நிரப்பும் தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்று, உடல் எரிப்பு – இருவர் கைது

 

பெட்ரோல் நிரப்பும் தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்று, உடல் எரிப்பு – இருவர் கைது

தஞ்சை

கும்பகோணத்தில் பெட்ரோல் நிரப்புவதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை அடித்துக்கொன்று தீ வைத்த 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கம்மாளத்தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஸ்ரீதர்(38). இவர் நேற்று முன்தினம் இ.பி.காலனி பகுதியில் உடலில் காயங்களுடன் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

பெட்ரோல் நிரப்பும் தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்று, உடல் எரிப்பு – இருவர் கைது

அப்போது, தஞ்சாவூர் மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவியில் பதிவான வீடியோவில், இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப சென்ற ஶ்ரீதருக்கும், இரு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. சம்பந்தபட்ட நபர்கள் குறித்து விசாரித்தபோது, அவர்கள் தாராசுரம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்தோஷ்(23) மற்றும் அஜித் (23) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, பெட்ரோல் நிரப்புவது தொடர்பான மோதலில் ஶ்ரீதரை அடித்துக்கொன்றது தெரியவந்தது.

பெட்ரோல் நிரப்பும் தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்று, உடல் எரிப்பு – இருவர் கைது

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவரையும் விரைந்து செல்லுமாறு ஶ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார். மதுபோதையில் இருந்த இருவரும் ஆத்திரமடைந்து, ஶ்ரீதரை கைகளால் தாக்கிய நிலையில், வலி தாங்க முடியாமல் தப்பியோடி உள்ளார். அவரை பின்தொடர்ந்து துரத்திசென்ற இருவரும், கல்லால் தாக்கியதில் ஶ்ரீதர் நிலைகுலைந்து குப்புற விழுந்துள்ளார். அப்போது கல்லை தலையில் போட்டும், கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்தும் கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.