`விளையாட்டில் மோதல்; அடித்துக் கொல்லப்பட்ட வாலிபர்!- வினையான கைப்பந்து போட்டி

 

`விளையாட்டில் மோதல்; அடித்துக் கொல்லப்பட்ட வாலிபர்!- வினையான கைப்பந்து போட்டி

கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தை சேர்ந்த சின்னயப்பா என்பவரின் மகன் சுனில் (22). இவர் கர்நாடகாவில் உள்ள தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலைப் பார்த்து வந்த இவருக்கும், கொத்தப்பள்ளியை சேர்ந்த நவீன் (22) என்பவருக்கும் இடையே கைப்பந்து விளையாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நவீன் கூட்டாளியான கொடியாளம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் (19) என்பவர் சுனிலை கொத்தப்பள்ளியில் உள்ள தனியார் லேஅவுட்டிற்கு அழைத்து வந்ததோடு, அங்கு நவீன், ஜனார்த்தனன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த அனில் (28) ஆகியோர் சுனிலை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சுனில் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரு செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சுனில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கால்கள் அகற்றப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக பாகலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நவீன், அனில், ஜனார்த்தனன் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்க கொடியாளம், கொத்தப்பள்ளி பகுதியில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.