விளையாட்டில் சிறுவர்களிடையே தகராறு – 3வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூரம்

 

விளையாட்டில் சிறுவர்களிடையே தகராறு – 3வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூரம்

விளையாடும்போது சிறுவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கத்தில் மூன்றரை வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கின்றனர் இரண்டு சிறுவர்கள். இந்த கொடூர சம்பவம் சிவகாசி பகுதியில் நடந்திருக்கிறது.

விளையாட்டில் சிறுவர்களிடையே தகராறு – 3வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூரம்

சிவகாசி அடுத்த விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் பார்த்திபன் -கவியரசி தம்பதிக்கு பத்து வயதில் பிரியதர்சன் என்ற மகனும், மூன்றரை வயதில் தீனதயாளன் என்ற மகனும் இருந்தனர்.

பார்த்திபன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கவியரசி தனியார் மருத்துவமனையில் கேண்டின் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வீட்டின் பின்பக்கம் உள்ள இடத்தில் அக்கம்பக்கத்து சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.

அப்படித்தான் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் வந்து விளையாடியபோது பிரியதர்ஷினுக்கும் அஜய் என்கிற 11 வயது சிறுவனுக்கும் பிரவீன்குமார் என்ற 13 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தினால் பிரியதர்ஷனை பழிவாங்க நினைத்திருக்கிறார்கள் அஜய்யு பிரவீன் பிரவீன் குமாரும்.

இதனால் இருவரும் பிரியதர்ஷனின் தம்பி 3 வயது குழந்தையை விளையாட வா என்று அழைத்துக் கொண்டுபோய் கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் உள்ள கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டு கொலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்கள்.

வேலை விட்டு வந்த பார்த்திபனும் கவியரசுவும் தனது மூன்றரை வயது மகனுக்கு ஊர் முழுவதும் தேடியும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருக்கிறார் போலீசார் வந்து அக்கம்பக்கத்தினரிடம் உள்ள சிறுவர்கள் இடம் பிடித்து விசாரித்தபோது அஜய் -பிரவீன் குமார் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து அந்த இரண்டு சிறுவர்களையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒரு குழந்தையை அநியாயமாக கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.