மீண்டும் சிறைக்கு செல்லும் திஷா ரவி… 3 நாள் நீதிமன்ற காவல்!

 

மீண்டும் சிறைக்கு செல்லும் திஷா ரவி… 3 நாள் நீதிமன்ற காவல்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் டூல்கிட்டை பதிவிட்டதாகக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி காவல் துறையின் சைபர் பிரிவு கைது செய்தது. தேசத்துரோக, சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனக் குரலை எழுப்பியிருந்தனர்.

மீண்டும் சிறைக்கு செல்லும் திஷா ரவி… 3 நாள் நீதிமன்ற காவல்!

அவருக்கு ஏற்கனவே ஐந்து நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்றோடு முடிவடைந்தது. இன்று மீண்டும் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.