கிசான் முறைகேடு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

 

கிசான் முறைகேடு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

தமிழகத்தில் கிசான் முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6000 கடனுதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடைபெற்றிருப்பது அண்மையில் அம்பலமானது. இதனையடுத்து எந்தெந்த மாவட்டங்களில் மோசடி நடந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கிசான் முறைகேடு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப்பெறுமாறு அரசு உத்தரவிட்டதன் பேரில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பணத்தை திரும்பப்பெறும் நடவடிக்கையில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை கிசான் திட்டத்தில் முறைகேடாக பெறப்பட்ட பணத்தில் இருந்து கிட்டத்தட்ட ரூ.40 கோடி வசூலாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, பலர் கைதாகி வருகின்றனர்.

கிசான் முறைகேடு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

இந்த நிலையில், கிசான் முறைகேடு குறித்து தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடக்கிறது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.