சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் : மீண்டும் சிறையிலடைப்பு!

 

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் : மீண்டும் சிறையிலடைப்பு!

சிவசங்கர் பாபா தான் நடத்தி வந்த சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மபாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் புகார் அளித்தனர். மாணவிகளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது, கட்டியணைப்பது என எல்லை மீறி வந்த சிவசங்கர் பாபா அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் : மீண்டும் சிறையிலடைப்பு!

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர் .இதையடுத்து சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வர். நீதிமன்ற அனுமதியையடுத்து சிவசங்கர் பாபா விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் : மீண்டும் சிறையிலடைப்பு!

முன்னதாக சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் இதன் அடிப்படையில் அவர் மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.