“நான் உண்ணும் உணவு அவருடையது”: பிரபல இயக்குநர் வேதனை பதிவு!

 

“நான் உண்ணும் உணவு அவருடையது”: பிரபல இயக்குநர் வேதனை பதிவு!

தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவுக்கு இயக்குநர் சுப்ரமணியம் சிவா இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நான் உண்ணும் உணவு அவருடையது”: பிரபல இயக்குநர் வேதனை பதிவு!

விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த். லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றிய இவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“நான் உண்ணும் உணவு அவருடையது”: பிரபல இயக்குநர் வேதனை பதிவு!

இந்நிலையில் இயக்குநர் சுப்ரமணியம் சிவா தனது பேஸ்புக் பக்கத்தில்,
நான் ,
வேர் இல்லாத மரம்
இறகு இல்லாத பறவை
துடுப்பு இல்லாத படகு
இறைவன் எனக்கு
வரம் தரவில்லை
கிருஷ்ணகாந்தாகவே வந்தார்
திருடா திருடி தந்தார்
நான் உண்ணும் உணவு
அவருடையது ..
எல்லோரும் நல்லாயிருக்கவே
எப்போதும் பேசுவார்
சினிமாவை நம்பியே
பொழுதெல்லாம் சுற்றுவார்
எதார்த்தமாக இருந்து
ஏமார்ந்த ஏணிகளில்
இவரும் ஒருவர் ..
காலனே, உன் ஊரில்
நல்லவர்கள் இல்லையா?
100 வரை எங்களுடன்
வாழ வேண்டியவரை
நேற்றுடன் உன்னுடன்
அழைத்து கொண்டாயே ..
தப்பு செய்துவிட்டதாக
பித்துபிடித்து அலைவாய் ஒருநாள்
அய்யோ..இனி
வாரம் 3 முறை
யார் என் உயர்வு நலம்
விசாரிப்பார் ..
அய்யோ..இனி
யாரிடம் நான்
ஆசி வாங்குவேன் ..
சார் ..சத்தியம்
கண்ணீரோடு சொல்கிறேன்
இருக்கும் வரை
உங்களை துதிப்பேன்
பிறகு ..
சொர்க்கம் வந்து
உங்களுடையே இருப்பேன்
கிருஷ்ணகாந்த் சார்
உங்கள் குடும்பத்தாருடன்
சேர்த்து என்னையும்
ஆசீர்வதியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.