முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்!

 

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்!

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். கொரோனா தடுப்பு பணிக்காக மட்டுமே அந்த பணம் பயன்படுத்தப்படுமென முதல்வர் உறுதியளித்திருந்தார்.

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்!

அதன் படி, முதன்முதலில் நடிகர் சூர்யா குடும்பம் ரூ.1 கோடி கொடுத்து பிள்ளையார் சுழி போட்டு வைத்தனர். இதைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம், நடிகர் அஜித் ரூ.25 லட்சம், சன் டிவி குழுமம் ரூ.30 கோடி, சோஹோ நிறுவனம் ரூ.5 கோடி, ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரூ.1 கோடி, எஸ்.ஆர்.எம் குழுமம் ரூ.1.10 கோடி நிதி வழங்கினர். இதுமட்டுமில்லாமல் பல தனியார் தொண்டு நிறுவனங்கள் திரட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில், பொதுமக்களும் தங்களால் இயன்றதை முதல்வர் நிவாரண நிதிக்கான வங்கிக்கணக்கில் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க, கோடிக்கணக்கில் நிதி குவிவதாக இன்று காலை செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.