4 ஆண்டுகள் எளிமையான ஆட்சி…இயக்குநர் சேரன் வாழ்த்து!

 

4 ஆண்டுகள் எளிமையான ஆட்சி…இயக்குநர் சேரன் வாழ்த்து!

4 ஆண்டுகள் ஆட்சிக்கு முதல்வர் பழனிசாமிக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிவி சண்முகம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி , ஜெயகுமார் , எம்.சி.சம்பத், நடராஜன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், பாண்டியராஜன் , ராஜலட்சுமி, சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

4 ஆண்டுகள் எளிமையான ஆட்சி…இயக்குநர் சேரன் வாழ்த்து!

இந்நிலையில் இயக்குநர் சேரன் ட்விட்டர் பக்கத்தில், ” ஜெயலலிதா மறைவுக்குப்பின் 4 வருடங்கள் எளிமையான ஆட்சியை தந்த திரு. முதல்வர் பழனிசாமி மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றி. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு பதிவில், ” மாற்று அரசியலை விரும்பி வாக்களித்து நாம் தமிழர் கட்சியை மூன்றாவது நிலைக்கு கொண்டு வந்திருக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். நாதக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது.. சீமானுக்கு வாழ்த்துக்கள்..” என்று கூறியுள்ளார்.