தி ஃபேமிலி மேன் -2- பொங்கி எழுந்த இயக்குநர் சேரன்

 

தி ஃபேமிலி மேன் -2- பொங்கி எழுந்த இயக்குநர் சேரன்

மனோஜ் பாஜ்பாய் , பிரியாமணி , சமந்தா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள தி ஃபேமிலி மேன் -2 இணையத் தொடர் தமிழீல விடுதலைப்புலிகள் அமைப்பை அவமதிக்கும் விதமாகவும் , விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களை போராளிகளாக பயன்படுத்தியதுபோல காட்சிப்படுத்தியுள்ளதாகவும் கூறி திரையுலகினர் , அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அந்த இணையத் தொடரை தடை செய்ய கோரிக்கை விடுத்தனர். இந்த தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிரிந்தது குறிப்பிடத்தக்கது

தி ஃபேமிலி மேன் -2- பொங்கி எழுந்த இயக்குநர் சேரன்

இந்நிலையில் இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சேரன், ”தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை. ”எனக் குறிப்பிட்டுள்ளார்.